ஏப்ரல் 30 முதல் மே 14 வரை பகுதி நேர ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர ஒவ்வொரு மாநிலத்தின் தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு இரவுநேர ஊரடங்குடன் கூடிய பொது முடக்கமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல நாகலாந்து மாநிலத்திலும் கொரோனா தாக்கம் சற்று உயர்ந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அம்மாநிலத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை அன்று 207 புதிய பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பகுதிநேர ஊரடங்கினை அமல்படுத்தலாம் என நாகலாந்து அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன் படி பலத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பகுதிநேர ஊரடங்கின் போது பள்ளி, கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறன் சோதனை – பெற்றோர்கள் வலியுறுத்தல்!!
மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். பொது இடங்களில் 30% வரை மக்கள் கூடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலங்களிலும் 30% பேருக்கு மட்டுமே அனுமதி. இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.