தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறன் சோதனை – பெற்றோர்கள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து மாணவர்களின் திறனை சோதிக்க கூடாது என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பயிற்சி புத்தகங்கள்:
கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக நடுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்படவில்லை. மேலும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் மற்றும் கட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள் பயிற்சி புத்தகத்தைப் படித்து பயிற்சி கட்டகத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களையே மாணவர்கள் படிக்காத நிலையில் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘இந்த வருடம் முழுவதுமே மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பல மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை அடையாளம் காண திணறுகின்றனர். இந்த சூழலில் மாணவர்கள் பயிற்சி புத்தகத்தை படித்து பயிற்சி கட்டகங்களுக்கு பதிலளிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சிறப்பு அரியர் தேர்வு – அறிவிப்பு வெளியீடு!!
மாணவர்களின் புத்தகத்தில் உள்ள QR குறியீடுகளை பற்றிய விழிப்புணர்வு பல பெற்றோர்களுக்கு இல்லை. அதை தெரிவுபடுத்துவதற்கு ஸ்மார்ட் போன்களும், இணையதள வசதியும் இல்லை’ என தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கையில், ‘மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தால் அச்சடிக்கப்பட்ட பயிற்சி புத்தகங்ளையும், கட்டகங்களையும் மாணவர்களுக்கு விநியோகித்துள்ளோம்’ என கூறியுள்ளனர்.