அரசு கலை கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்துதல் – ஏப்ரல் 9 கடைசி நாள்!!
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ள நிலையில் தேர்வுக்கான கட்டணங்களை செலுத்தும் முறை குறித்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு கல்லூரி:
கோவையில் உள்ள அரசினர் கலை கல்லூரி தமிழகத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பாரதியார் பல்கலை உறுப்பினர் கல்லூரியான இது தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும். மத்திய மனிதவளத்துறை 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இக்கல்லூரி 33வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் கவலை!!
தேர்வுகள்:
கோவை அரசினர் கலை கல்லூரி நிர்வாகமானது நடப்பு ஆண்டு தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க உள்ள நிலையில் தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் முறையில் நாளை முதல் செலுத்தலாம். தேர்வுகளானது நடப்பு ஆண்டில் பயிலும் இளநிலை, முதுநிலை மாணவர்கள் மற்றும், கல்லூரி படிப்பை முடித்து நிலுவை தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கும் நடக்க உள்ளது.
தேர்வு கட்டணம்:
தேர்வுக்கான கட்டணம் பற்றிய விவரங்கள் மற்றும் தேர்வு கட்டணம் போன்றவற்றை www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு கட்டணத்தை செலுத்த ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும். அபாரத்துடன் ஏப்ரல் 11ம் தேதி வரையும், தட்கல் முறையில் ஏப்ரல் 12, 13ம் தேதியும் செலுத்தலாம். தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்