தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் கவலை!!

1
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - ஆசிரியர்கள் கவலை!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - ஆசிரியர்கள் கவலை!! தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - ஆசிரியர்கள் கவலை!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் கவலை!!

ஆல்பாஸ் அறிவிப்புக்கு பின்னர் மாணவர்கள் கற்றலில் சரிவர ஆர்வம் காட்டுவதில்லை என்றும், அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் கற்பித்தல் பணிகள் தொடர்பான ஆணைகளை முன்னதாகவே பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் கோரியுள்ளார்.

ஆல்பாஸ் அறிவிப்பு:

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே திறக்கப்பட்டது. அதிலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்றது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி தொடர்ந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வை ரத்து செய்து அறிவித்தது. இதனால் 12ம் வகுப்பை தவிர அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகள் விடுமுறை:

தமிழகம் முழுவதும் திடீரென்று கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வந்தது. அதிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே தொற்றின் பரவல் அதிக அளவில் இருந்தது. தமிழகத்தில் தொடர்ந்து ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வந்தது. இதனை கவனித்த தமிழக அரசு தமிழகத்தில் 12ம் வகுப்பை தவிர அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – பள்ளிகள் திட்டம்!!

ஆசிரியர் கழக கோரிக்கை:

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறுகையில், “தமிழக மாணவர்கள் அனைவர்க்கும் ஆல்பாஸ் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வதில்லை என்று கூறுகின்றார். மேலும், தொற்றின் தாக்கம் இன்னும் நீடிக்கும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால், அரசு ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை முன்னதாகவே வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!