UPSC தேர்வாணையம் தற்போது NDA & NA தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 400 காலிப்பணியிடங்களை கொண்ட NDA & NA (I) பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கான விண்ணப்ப அவகாசம் ஜனவரியுடன் முடிவடைந்த நிலையில் எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்றது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்
தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் SSB நேர்காணலின் போது வயது மற்றும் கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்களை அந்தந்த சேவைத் தேர்வு வாரியங்களில் (SSBs) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கான மதிப்பெண் சான்றிதழ் 15 நாட்களில் UPSC இணையதளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.