தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – பள்ளிகள் திட்டம்!!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் - பள்ளிகள் திட்டம்!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் - பள்ளிகள் திட்டம்!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – பள்ளிகள் திட்டம்!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தி மதிப்பீடுகளை வழங்க பள்ளிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதிப்பெண் மதிப்பீடு செய்வதற்கான விபரங்களை அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் தேர்வுகள்:

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்து தற்போது சில குழப்பங்கள் உள்ளன. இதற்கான மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் ஆண்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

ஜனவரி 19 முதல் மார்ச் 22 வரை தங்கள் பள்ளிகள் ஒரு மாதிரி தேர்வு கூட நடத்தாததால், அரசு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விநிலை சரிவடையும் நிலையில் உள்ளது என்று தற்போது கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய வசதிகள் கிடைக்காததால், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான ஆன்லைன் தேர்வுகளை நடத்த முடியாது.

TN Job “FB  Group” Join Now

எந்தவொரு சோதனையுமின்றி 10ம் வகுப்புக்கு மதிப்பெண்கள் ஒதுக்குவதில் நிலவும் குழப்பம் குறித்து அரசு நடத்தும் பள்ளிகளின் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஏற்கனவே கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான அளவுருக்களை அரசு அறிவிக்கும் வரை அதிகாரிகள் காத்திருப்பதாக கூறினார். தேர்தலுக்கு பின்னர் இது அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுக்க உதவும்.

அரசு நிறுவனங்களுக்கு இன்று (மார்ச் 25) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் அனைத்து பாடங்களிலும் வருடாந்திர தேர்வுகள் அல்லது திருத்த சோதனைகள் நடத்தப்படும். இது ஆன்லைன் மூலம் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் மதிப்பெண்கள் குறிப்பிடப்படலாம் என தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!