தமிழகத்தில் அரசு நிறுவனங்களுக்கு இன்று (மார்ச் 25) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 25) அரசு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேரோட்ட திருவிழா:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவத்தலங்களில் ஒன்றான தியாகராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கால தாமதம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இந்த தேரோட்டம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறவில்லை. இந்த ஆண்டு பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் நடைபெறுவது சிறப்பு.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு இந்த விழா வெகுவிமரிசையாக மார்ச் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று காலை 5 மணி அளவில் காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் காலை 7.30 அளவில் அழித்தேரோட்டம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!
இது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மாற்று நாளாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்றாலும் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.