தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி வந்த காரணத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு முறையினால் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று – மத்திய அரசு அறிவிப்பு!!
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
தமிழகத்தில் டிசம்பர் 6ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்க்கு கல்லூரியும், ஜனவரி 19ம் தேதி முதல் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்க அனுமதியளித்தாலும் அரசு நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது. மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையேயும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
கல்லூரி மாணவர்களுக்கு தொற்று:
தற்போது தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரியை சேர்ந்த 345 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
I2th students kum leave vidunga pa avangalum mansusangathan avangalukum corona varum avanga uyiroda vilaiyadathinga pa