தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் – பிப்.22ம் தேதி கடைசி நாள்!!
முன்களப் பணியாளர்கள்:
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தாலும் ஆரம்ப கட்டத்தில் அனைவர்க்கும் வழங்குவதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்பதால் மத்திய அரசு முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக தடுப்பூசி போட முடிவு செய்தது.
மதுரையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!!
சுகாதாரப் பணியாளர்கள்:
தமிழகத்தில் உள்ள 5.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள பிப்ரவரி 22ம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணியாளர்கள் பொதுமக்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சுகாதார இயக்குனர் அறிவிப்பு:
தமிழக பொது சுகாதார இயக்குனர் செல்வா விநாயகம் அவர்கள் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 5.5 லட்சம் சுகாதார பணியாளர்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது வரை 1.74 லட்சம் சுகாதார பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். மத்திய அரசு இந்த பணியை 22ம் தேதியுடன் முடிக்க உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்