மதுரையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!!
தமிழக அரசின் திட்டம்:
தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் வேலை தேடும் நபர்கள் கலந்து கொண்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்படுவார்கள். தமிகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தமிழக அரசு அனைத்து வெள்ளிக்கிழமைகளையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’யாக அறிவித்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வாரம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் கோரிக்கை – ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் நிறைவு!!
மதுரையில் முகாம்:
இந்த திட்டத்தின் அடிப்படையில் நாளை மதுரையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறைகளின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் ஆர்.மகாலட்சுமி அவர்கள் செய்திக்குறிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்., 12) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
TN Job “FB Group” Join Now
இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதனால், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, தொழிற்கல்வி படித்த வேலை தேடும் நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு தங்களின் கல்வி சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்