தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை தாமதம் இன்றி பதிவு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வு விபரங்கள்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 11 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதிவேற்றுதல், தேர்வுக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்!!
பிளஸ் 2 மாணவர்களுக்கான விபரங்கள் முழுமையாக பெறப்பட்டு உள்ள நிலையில், அடுத்த கட்டமாக 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பணிகள் தொடங்கி உள்ளது. ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்ட அறிவுறுத்தலின் படி, பிப்ரவரி 1 முதல் 11ம் தேதிக்குள் அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் பெரும்பாலான பள்ளிகள் இந்த பணிகளை இன்னும் தொடங்காமல் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் இன்று வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் பொதுத்தேர்வு விபரங்களை பதிவு செய்ய இறுதி நாள் நெருங்கி விட்ட போதிலும், பெரும்பாலான பள்ளிகள் அதனை தொடங்காமல் உள்ளன. எனவே தாமதமின்றி அப்பணியை கட்டாயமாக ஓரிரு நாட்களில் முடித்து தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்