பழைய ஓய்வூதிய திட்டம் கோரிக்கை – ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் நிறைவு!!
ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பின்னர் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டம் சமீபகாலத்தில் மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
போராட்டம்:
மாற்றப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படியே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல முறை போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அரசு தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டியும், மற்ற சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகில் கடந்த 72 மணி நேரமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!!
அரசு தரப்பு :
ஜாக்டோ-ஜியோ இந்த போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். இவர்களின் 72 மணி நேர போராட்டத்திற்கு பின்னரும் அரசு தரப்பில் இருந்து பேச்சு வார்த்தைக்கு முன் வரவில்லை. இந்நிலையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தங்களின் போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று ஜாக்டோ – ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்