நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு – காய்கறி, மளிகைக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
கொரோனா சீனாவை காட்டிலும் மற்ற உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 3 மாதங்களில் இந்த வைரஸ் பாதிப்பினால் 3100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் பொருட்களை வாங்க நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வரும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) மக்களால் மக்களுக்காக ஊரடங்கு பிறப்பித்துள்ளதுபோல கருதிக் கொள்ளுமாறும், காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நாளை 22.03.2020 அடைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?
மேலும், கொரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமானால், கடைகள் மார்ச் 31-ம் தேதி வரைஅடைக்கப்படலாம் என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடந்த சில நாட்களுக்கு தேவை படும் அளவுக்கு வாங்கிவைத்து கொள்ளவும்.
சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்