சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல் !
படங்கள் பார்ப்பது தமிழ் மக்களுக்கு அதிக பட்ச பொழுதுபோக்கு ஆகும். இதனால் திரையரங்குகள் மூடப்படும்போது சினிமா தொழில் பாதிக்கப்படுகிறது, மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். தியேட்டர்களில் வேலை செய்வோருக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனால் இது முதல் முறையல்ல.
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!
திரையரங்குகள் முழுமையாக மூடப்படுவது இது 5 வது முறை. முன்னதாக ஒரு நாள், இருநாள் மூடபட்டு வந்த தியேட்டர்கள் இப்போது வாரக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ளன.
முதல்முறை : மக்களவைத் தேர்தல்
16வது மக்களவைத் தேர்தலின் காரணமாக 2014ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மாலை 6 மணி வரை திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன
இரண்டாவது முறை : அப்துல்கலாம் மரணம்
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மரணித்திருந்த காரணத்தால் 2015ம் ஆண்டு தியேட்டர்கள் ஒரு நாள் அடைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?
மூன்றாவது முறை : வரி பிரச்சனை
2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரி பிரச்னை காரணமாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன.
நான்காவது முறை : டிஜிட்டல் பரொஜெக்டர்கள் பிரச்சனை
டிஜிட்டல் பரொஜெக்டர்களுக்கு அதிக விலை வசூலிப்பதாக டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்கள் மீது குற்றம் சாட்டி போராட்டம் நடந்தது. அப்போதும் திரையரங்குகள் மூடப்பட்டன.
தற்போது …. கொரோனா
இந்நிலையில் தற்போது கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.. இது மட்டுமல்லாம், சினிமா ஷூட்டிங், சீரியல்கள், விளம்பரப்படங்கள் உட்பட பல நிறுத்தப்பட்டுள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்