9 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, 42 ஆயிரத்தை தாண்டிய பலி – இந்தியாவின் நிலைமையும் பரிதாபம்..!
உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன.
ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு
42 ஆயிரத்தை தாண்டிய பலி..!
உலகளவில் இதுவரை 8,59,338 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 42,334 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,78,125 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 1,88,578 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 4,054 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,05,792 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 12,428 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு..!
ஸ்பெயினில் 95,923 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 8,464 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,518 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,305 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 1,590 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 45 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க நாம் ஊரடங்கு உத்தரவை மதித்து, சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டில் இருப்பதை தவிர வேறு வழியில்லை.
கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |