ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு

0
ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு
ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு

ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டித்து தற்காலிக பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுநலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!