இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசுகள் அறிவிப்பு!!

2
இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசுகள் அறிவிப்பு!!
இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசுகள் அறிவிப்பு!!
இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசுகள் அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் குஜராத், ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் இன்று இரவு முதல் ஏப்ரல் மாத இறுதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில இரவு ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,15,000க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த மாநிலங்களில் உள்ள 20 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இம்மாத இறுதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மேலும் நோய் பரவல் காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.  கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால், திருமண நிகழ்ச்சிகள், விசேஷ திருவிழாக்கள் நடத்துவதை தடை செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு – CEO எச்சரிக்கை!!

ஜார்கண்ட் மாநில கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள்:

  • கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால், திருமண நிகழ்ச்சிகள், விசேஷ திருவிழாக்கள் போன்றவற்றில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
  • தவிர்க்க முடியாத, இறுதி சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
  • மாநிலத்தில் கூட்டமாக மத ஊர்வலங்கள் உட்பட அனைத்து ஊர்வலங்களும் நடத்தப்படக் கூடாது.
  • உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அனைத்து பூங்காக்களும் மூடப்பட வேண்டும்.
  • அனைத்து கடைகளும், உணவு விடுதிகள் மற்றும் கிளப்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மேல் செயல்படக் கூடாது.
  • உணவு பொருட்களை வீட்டில் சென்று விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!!

டெல்லி கொரோனா கட்டுப்பாடுகள்:

டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் நேற்று முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!