தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு – CEO எச்சரிக்கை!!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவு தேர்வு நடத்த அனுமதியில்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நுழைவுத் தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் 10 மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. இருந்த போதிலும் ஆன்லைன் மூலமாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாத காரணத்தால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்குவதாக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் மதிப்பெண் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 8) முதல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இந்நிலையில் சில பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ச்சி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு நடத்தபடக் கூடாது என முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நுழைவுத் தேர்வு முறை காரணமாக படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பள்ளிகளில் சேர முடியாத நிலை உள்ளது.
பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி – பிரதமர் மோடி இன்று மாணவர்களுடன் கலந்துரையாடல்!!
கல்வித்துறை உத்தரவை மீறி பள்ளிகள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.