தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 71.79 சதவீத வாக்குப்பதிவு!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நேற்று சட்டமன்ற தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் தோராயகமாக 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் நேற்று 234 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழக மக்கள் அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு அச்சமடைந்து 7 மணிக்கு முன்பே வாக்கை அளிப்பதற்கு ஆர்வம் காட்டி நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.
நாடு முழுவதும் தீவிரமடையும் கொரோனா – அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியம்!!
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் அதிகரித்து வந்த வாக்குப்பதிவு பின்பு வெகுவாக குறைந்து வந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வாக்கு மையங்களின் எண்ணிக்கை சுமார் 88,937 ஆக அதிகரித்தனர். மேலும் வாக்களிக்கும் நேரத்தையும் இரவு 7 மணி வரை நீட்டித்தனர்.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாகவே சில வாக்குச்சாவடிகளில் மக்களின் வருகை குறைந்து. மேலும் வாக்காளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர் மற்றும் பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்கை செலுத்தினர்.
Petrol & Diesel Rate in Chennai – இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
நேற்று இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழகத்தில் நேற்று தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78% மற்றும் குறைந்தபட்சமாக சென்னையில் 59.4% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வாக்குகள் அனைத்தும் வருகிற மே மாதம் 2ம் தேதி அன்று எண்ணப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.