நாடு முழுவதும் தீவிரமடையும் கொரோனா – அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியம்!!
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது. இந்நிலையில் அடுத்த நான்கு வாரங்கள் மக்கள் அனைவரும் கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பல தரப்பினர் தங்களது வேலை மற்றும் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரையும் இழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நாட்டில் கொரோனா பரவல் குறைந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நடைமுறைக்கு வந்தது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமெடுத்து வருகிறது. தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இது குறித்து நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.
Petrol & Diesel Rate in Chennai – இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
இது குறித்து அவர் கூறியதாவது, நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த நான்கு வாரங்கள் நாடு முழுவதும் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டும். கொரோனாவை விரட்டுவதற்கு மக்களின் பங்களிப்பு மிக முக்கியம். நாடு முழுவதும் பரிசோதனை குறைத்தல், தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.