பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி – பிரதமர் மோடி இன்று மாணவர்களுடன் கலந்துரையாடல்!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளும் நோக்கில் பிரதமர் மோடி இன்று (07-04-2021) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மோடி கலந்துரையாடல்:
தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும், 4ஆவது முறையாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வினால் உண்டாகும் மனஅழுத்தம் குறித்து இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2000 பேர் பங்குபெற்றனர். அதன்படி இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த கலந்துரையாடல் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வு குறித்தும், அதை எப்படி மாணவர்கள் எதிர் கொள்வது என்பதை குறித்தும் பிரதமர் மோடி இன்று (07-04-2021) பேசவுள்ளார்.
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பல்வேறு துறைகள் குறித்த சந்தேகங்களை, கேள்விகளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடும் வகையில் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி இன்று (07-04-2021) மாலை 7 மணிக்கு நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்