தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகள் நாளை வெளியாகும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவினால் ஏற்படும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி வருகிறது. தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை எட்டி வருகிறது. நோய் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது வலியுறுத்தப்பட்டும், அதை பின்பற்றும் மக்கள் வெகு சிலரே. மக்களின் அலட்சியம் காரணமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்று மக்களிடையே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பொதுத்தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அறிவிப்புகள் வெளிவரும் என்ற கருத்துகளும் மக்களிடையே காணப்படுகிறது.
பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி – பிரதமர் மோடி இன்று மாணவர்களுடன் கலந்துரையாடல்!!
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய அறிவிப்பை சுகாதாரத்துறை நாளை வெளியிடவுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் இருக்காது என்றும், அரசு அறிவித்த தளர்வுகளில் மீண்டுமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்