இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் – ஒரே நாளில் 10,093 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் - ஒரே நாளில் 10,093 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் - ஒரே நாளில் 10,093 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் – ஒரே நாளில் 10,093 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பை தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா:

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து விட்டது ஒரு வழியாக தொற்றிலிருந்து மீண்டு வந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக திடீரென பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,093 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

அதே நேரம் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து 57,742 ஆக உள்ளது. மேலும் தொற்றிலிருந்து இருந்து மீண்டு குணமடைந்தவர்களின் விகிதம் 98.60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றை விட இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவு தான் என்றாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!