தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்காக செல்லும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது வரைக்குமே நிரப்பப்படாமலே உள்ளது. மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட பணியிடங்கள் நியமிக்கப்படாமல் உள்ளன. இதனால், மாணவர்களுக்கு முறையாக கல்வியை வழங்க போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து, ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கால தாமதம் ஆகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கான விண்ணப்பங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தபடியே உள்ளன. மேலும், காலியிடம் குறித்தான விவரங்களை அருகிலுள்ள பள்ளியின் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழக போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு? ஜூலை 11ம் தேதி பேச்சுவார்த்தை!
இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் முழுமையாக நிறைவு பெறாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவித்துள்ளார்.