இந்தியாவில் மாநிலங்களுக்கு உதவ குழு..ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க அதிரடி – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியாவில் மாநிலங்களுக்கு உதவ குழு..ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க அதிரடி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மாநிலங்களுக்கு உதவ குழு..ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க அதிரடி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மாநிலங்களுக்கு உதவ குழு..ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க அதிரடி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் ஜூன் மாதம் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் ஹீட் ஸ்ட்ரோக் நோய் காரணமாக உயிரிழப்பை தடுக்க மாநிலங்களுக்கு உதவி குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹீட் ஸ்ட்ரோக்

இந்தியாவில் இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல மாநிலங்களில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் 40 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அதனால் உடல்நிலை கோளாறு ஏற்படுகிறது. மேலும் பீஹார் மாநிலத்தில் 12 பேர் வெயில் அதிகமாக இருப்பதால் உயிரிழந்து இருக்கின்றனர். அதனால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் நாளை 11 ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கான முடிவுகள் வெளியீடு – தேர்வுத்துறை அறிவிப்பு!

இந்நிலையில் வெப்பநிலை அதிகரிக்கும் மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!