
பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!! தமிழ்நாடு அரசு மார்ச் 14 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு…!! ஏன் தெரியுமா..?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மலைக்கோட்டை என்று அழைக்கப்படும் சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், 2025 ஆம் ஆண்டிற்கான திருத்தேரோட்டம் வருகின்ற மார்ச் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இந்த திருவிழாவிற்காக ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு
எனவே, அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 4 தாலுகாவை சேர்ந்த அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் அஞ்செட்டி ஆகிய 4 தாலுகாவிற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

























