அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை அக்டோபர் 4ம் தேதி முதல் கல்லூரிகளின் நேரடியாக தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து பாடத்திட்டங்களையும் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க புதிய வழிமுறைகளும் கல்வித்துறை சார்பில் வகுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்ததால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு திறந்து உள்ளன.
எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஜனவரி 29 கடைசி நாள்!!
தற்போது கர்நாடக மாநில அரசு உத்தரவுப்படி, கர்நாடகாவில் உள்ள கல்லூரிகள் அக்டோபர் 4 முதல் புதிய கல்வியாண்டிற்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து பாடங்களையும் விரைவில் நடத்தி முடிக்கும் வகையில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் மற்றும் செமஸ்டர் விடுமுறை ரத்து உள்ளிட்ட வழிமுறைகள் கையாள திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் குறைந்தபட்சம் 90 வேலை நாட்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
ஜனவரி 15 முதல் இளங்கலை, முதுகலை, பொறியியல் மற்றும் டிப்ளோமா படிப்புகளின் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளை மீண்டும் திறக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்