தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளிகள் 10 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் நேற்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நடமாடும் பள்ளிகள் தொடங்க திட்டம் – மாநகராட்சி அறிவிப்பு!!

அதில் குறிப்பாக ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள், மாணவர்களுக்கான சத்து மாத்திரை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தற்போது கூடுதலாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – முதல்வருக்கு கோரிக்கை!!

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் கொரோனா உறுதி செய்யப்படும் மாணவர்களுக்கு அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!