1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை .. அரசு அறிவிப்பு!!
டெல்லியில் வழக்கத்திற்கும் அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் மாசு மற்றும் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே, காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் இன்று (நவம்பர் 18) முதல் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வில் முறைகேடு…!! ” அதிர்ச்சி தகவல் வெளியீடு”..!!
அதில், டெல்லியில் இன்று (நவம்பர் 18) முதல் 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும். 10 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை இதனை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின்சார துறை சார்ந்த பணிகள், குழாய் பதிப்பு உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளன.
Telegram Updates for Latest Jobs & News – Join Now


























