கோவிலில் எக்கச்சக்க காலிப்பணியிடம் – ரூ.1,47,760 வரை சம்பளம்!! உடனே விண்ணப்பிக்கவும்!!
உடனே விண்ணப்பிக்கவும்!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்ஜினியரிங் துறையில் காலியாகவுள்ள பணியிடம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
ஏழுமலையான் கோவில்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் காலியாகவுள்ள 56 பணியிடம் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதாவது, ஏஇஇ சிவில் பிரிவில் 27 காலியிடங்களும், ஏஇ சிவில் பிரிவில் 10 காலியிடங்களும், ஏடிஓ சிவில் பிரிவில் 19 பணியிடங்களும் என மொத்தமாக 56 காலி பணியிங்கள் உள்ளது.
அரையாண்டுத் தேர்வு டிச.7 துவக்கம் – பீதியில் மாணவர்கள்!!
BE சிவில், மெக்கானிக்கல் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஏஇஇ சிவில் பிரிவில் சேரும் ஊழியர்களுக்கு ரூ.57,100 முதல் ரூ.1,47,760 வரை சம்பளமும், ஏஇ சிவில் பிரிவில் சேருபவர்களுக்கு ரூ. 48,440 முதல் ரூ.1,37,220 வரை சம்பளமும், ஏடிஓ சிவில் பிரிவில் சேருபவர்களுக்கு ரூ.37,640 முதல் 1,15,550 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பிரிவின் கீழ் நீங்களும் இணைய நினைத்தால் https://ttd-recruitment.aptonline.in என்கிற இணைதள பக்கத்தின் மூலமாக நவ.23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.