அரையாண்டுத் தேர்வு டிச.7 துவக்கம் – பீதியில் மாணவர்கள்!!
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு டிச.7 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் மாணவர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர்.
அரையாண்டுத் தேர்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.7 ஆம் தேதி அரையாண்டுத்தேர்வு துவங்கி டிச.22 ஆம் தேதி முடிவடைகிறது. அந்த வகையில், டிச.7 ஆம் தேதி மொழிப்பாடமும், டிச.8 ஆம் தேதி ஆங்கிலமும், டிச.11 ஆம் தேதி கணிதம், விலங்கியம், வணிகம், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து, டெக்ஸ்டைல் & ட்ரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது) தேர்வுகளும் நடைபெற இருக்கிறது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம் தகவல்!
டிச.13 ஆம் தேதி தகவல் தொடர்பு ஆங்கிலம், எதிக்ஸ் மற்றும் இந்திய கலச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வும், டிச.16 ஆம் தேதி இயற்பியல், பொருளியல் தேர்வும், டிச.19 ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல் தேர்வும், டிச.22 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸினஸ் கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்வு முடிவடைந்து டிச.23 ஆம் தேதி முதல் ஜன.1 ஆம் தேதி வரையிலும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிவடைந்து ஜன.2 ஆம் தேதி வகுப்பு மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.