கனமழையால் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடல்…” போக்குவரத்து துறை அறிவிப்பு”…!!
சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நேற்று முதல் தொடர்ந்து இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், தொடர் மழை காரணத்தால் சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், அங்குள்ள 22 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, சுந்தரம் பாய்ண்ட், துரைசாமி சுரங்கப்பாதை, கணேசபுரம் உள்ளிட்ட 5 சுரங்கப்பாதைகளை மூடப்பட்டுள்ளது.
























