ஆக.6 சென்னையில் பன்னாட்டு மாரத்தான் போட்டி – ஏற்பாடுகள் தீவிரம்.. அமைச்சர் தகவல்!!
கலைஞர் நூற்றாண்டு விழாவினை ஒட்டி சென்னையில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று பன்னாட்டு மாரத்தான் போட்டிகள் நடக்க உள்ளது.
மாரத்தான் போட்டி:
தமிழக அரசு நடப்பு ஆண்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் சிறப்பித்து வருகிறது. இதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவமுகாம்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் 6ம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவினை ஒட்டி சென்னையில் 75,000 மாரத்தான் போட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடக்க உள்ளது.
போலி ஆவணங்களை கண்டறிய புதிய சாப்ட்வேர் – வருமான வரித்துறையின் அதிரடி செக்!
கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சி திட்டமிட்டுள்ளதாகவும், இதில் கிடைக்கும் தொகையின் மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 5,10, 21 மற்றும் 42 கி.மீ., பிரிவுகளில் போட்டிகள் மெரினாவில் துவங்கி, அடையாறு, மத்திய கைலாஷ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, மீண்டும் மெரினாவில் நிறைவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.