போலி ஆவணங்களை கண்டறிய புதிய சாப்ட்வேர் – வருமான வரித்துறையின் அதிரடி செக்!
மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் போலி ஆவணங்களை ஒப்படைத்தால் அதனை கண்டறிய வருமான வரித்துறையின் சார்பில் புதிய சாப்ட்வேர் கண்டறியப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை:
இந்தியாவில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் வருடத்திற்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது, மொத்த வருமானத்தில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடை ஆகிய செலவுகள் கழிக்கப்பட்டு வருட சம்பளம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே வருமான வரி கட்டாயமாக செலுத்த வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால், பல்வேறு ஊழியர்கள் வருமானவரி செலுத்த கூடாது என்பதற்காக போலியான வீட்டு வாடகையை ஒப்படைப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், போலியான ஆவணங்களை கண்டறிவதற்காக வருமானவரித்துறை புதிய சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அரசு பொது மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை & பரிசோதனைகள் – மகாராஷ்டிரா அரசின் திட்டம்!
இந்த சாப்ட்வேர் மூலமாகவே மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் ஒப்படைத்த போலியான ஆவணங்கள் கண்டறியப்பட்டு 200% வரைக்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், போலியான ஆவணங்களை ஒப்படைத்த ஊழியர்களுக்கு எச்சரிக்கை மற்றும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.