அரசு பொது மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை & பரிசோதனைகள் – மகாராஷ்டிரா அரசின் திட்டம்!
மகாராஷ்டிரா மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலவச மருத்துவம்:
நாட்டின் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு மருத்துவ உதவி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் இலவசமாக செய்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 2,418 அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்துள்ள மாநில அமைச்சரவையின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புகைபிடிக்கும் அறைகளுக்கு தடை – அரசின் அதிரடி உத்தரவு!
இத்திட்டத்தின்படி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவமனைகள், மாவட்ட பொது மருத்துவமனைகள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நாசிக் மற்றும் அமராவதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.