தமிழகத்தில் புகைபிடிக்கும் அறைகளுக்கு தடை – அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உணவு கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு
தமிழகத்தில் புகைப்பிடிப்பதால் ஏகப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது. புகைப்பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தமிழக அரசு தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உணவுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து இருக்கிறது.
ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய திருப்பம் – அதிகாரிகள் நடத்திய திடீர் களஆய்வு!
மேலும் அரசு உணவகங்களில் புகைபிடிக்கும் கூடத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றிய நிலையில் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மதுபான கடைகள் தவிர்த்து புகைபிடிக்கும் அறை மற்றும் கூடத்தை எங்கும் திறக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.