ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய திருப்பம் – அதிகாரிகள் நடத்திய திடீர் களஆய்வு!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டு மேல் முறையீடு செய்தால் ஆய்வாளர்கள் வீடுகளில் திடீர் களஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்ப தலைவிகளின் விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பம் ஏற்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என பயனர்களின் மொபைல் எண்ணிற்கு செய்தி அனுப்பப்படும்.
தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!
அவ்வாறு, குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது, 4 சக்கர வாகனங்கள் இருக்கும் காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் குடும்ப தலைவிகள் மேற்முறையீடு செய்தால் வீட்டிற்கு நேரில் வந்து ஆய்வாளர்கள் களஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.