தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கமாக மே மாதம் கோடை விடுமுறை விடப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை நாட்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வர்களே.. இந்த புக் வாங்குங்க – ஈஸியா பாஸ் பண்ணுங்க!
அது மட்டுமில்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் கோடை கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை நியமனம் செய்துள்ளது. இது குறித்து பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.