சென்னையில் கொரோனா பரவல் 40% உயரும் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!
சென்னையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அடுத்த 3 வாரங்களில் 30 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா உயரும் அபாயம்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அதனால் இரவு ஊரடங்கும், வார இறுதிநாள் ஊரடங்கும் மறுஉத்தரவு வரும் வரை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் அதிகப்படியாக கொரோனா பாதிப்பு சென்னையில் பதிவாகியுள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் பாதிப்பு 4000யை கடந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 3 வாரங்களில் 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை தொற்று உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு – உயர் நீதிமன்றம் பரிந்துரை!!
தற்போது வரை சென்னையில் கொரோனா பரவும் விகிதம் 20 சதவிகிதம் கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று இருமடங்காகும் வேகம் முதல் அலையை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் மக்கள் கொரோனா விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.