18+ வயதினருக்கு தனியார் மருத்துவமனையில் மட்டுமே தடுப்பூசி – சுகாதார செயலர்!!
மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதலில் தயாரிப்பு பணிகள் நிறைவடையாததால் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் முன்னிரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மட்டும் போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது தடுப்பூசி உற்பத்தி பணிகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் வரும், மே 1ம் தேதி முதல் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளர். அதன்படி, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சக செயலர் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட விரும்புபவர்கள் Cowin தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வயது வரம்பை சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசி போட வாய்ப்புள்ளதால் தனியார் தடுப்பூசி மையங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்