தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு – உயர் நீதிமன்றம் பரிந்துரை!!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த சில வாரங்களாக வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாடு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் பொருந்தாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கைமீறி செல்லும் பரவல் காரணமாக மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் 1,100 சிறப்பு காவலர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!!
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேர்தல் பணி தொடர்பான வாகனங்களை மட்டும் மே 01, 02 தேதிகளில் அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.