மும்பையில் 1,100 சிறப்பு காவலர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு!!
மும்பையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் உதவிக்காக 1,100 சிறப்பு காவலர்களை மும்பை காவல்துறை நியமித்துள்ளது.
காவல்துறையினர் நியமனம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா பரவல் காரணமாக அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இதனால் அந்த குடியிருப்பு பகுதிகளுக்கு ஒரு சிறப்பு காவலரை நியமிக்க மும்பை காவல்துறை திட்டமிட்டுள்ளது. அவர்கள் மூலமாக அந்த பகுதிகளில் ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தேவையான பொருள்களை ஏற்பாடு செய்யும் வகையில் அவர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர். இதற்காக இதுவரை 1,100 சிறப்பு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்துதலில் செய்ய வேண்டியது – மருத்துவர்கள் அறிவுரை!!
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிராவாகும். இதனால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இந்த திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது.