மக்கள் வீடுகளில் கூட முகக்கவசம் அணிய வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மக்கள் வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகமாக பரவி வருகிறது. அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நோக்கில் பல ஏற்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அரசு அறிவித்து வரும் கட்டுப்பாடுகளை தவிர்த்து மக்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்குவது மூலமாக மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மக்கள் காவல்துறையினருக்கு மட்டுமே பயந்து முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். கொரோனாவிற்கு பயமில்லை.
தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு – உயர் நீதிமன்றம் பரிந்துரை!!
மக்கள் கொரோனாவிற்கு பயந்து சுய கட்டுப்பாடுடன் இருப்பதால் மட்டுமே கொரோனா கட்டுக்குள் கொண்டு வர இயலும். இதே நிலைமையில் இருப்பதால் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.