தமிழக அரசு பள்ளிகளில் இனி டிஜிட்டல் முறையில் செயல்பாடு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம்:
தமிழக அரசு பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு புதிய திட்டங்களையும், முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், மே மாத கோடை விடுமுறை காலத்தை பள்ளிக்கல்வித்துறையினர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வி முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தை மிரட்ட போகும் கனமழை – அடுத்த 4 நாட்களுகான வானிலை அறிக்கை இதோ!
அதில், அமைச்சர் CEOகளுக்கு இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படைவசதிகள் போன்றவற்றை முறையாக பராமரித்து வைக்க வேண்டும். மாணவர்களுக்கான EMIS இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து செயல்பாடுகளையும் டிஜிட்டல் முறையில் மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
பேப்பரில் உள்ள பழைய கோப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு அரசு பள்ளிகளுக்கு அனைத்து வழிகளிலும் உதவ அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய கல்வி ஆண்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.