தமிழகத்தை மிரட்ட போகும் கனமழை – அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல பிற மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே. 02ம் தேதி மின்தடை – எந்த ஏரியாவில் தெரியுமா? விவரம் வெளியீடு!
அதே போல திருவள்ளூர் தர்மபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கரூர் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மே -2ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே -3ம் தேதி நாமக்கல் திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திருப்பத்தூர் திண்டுக்கல் தர்மபுரி திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே – 4 மற்றும் 5 ம் தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று குமரி கடல், மன்னார் வளைகுடா லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 -45 கி.மீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது