ஜேஇஇ அட்வான்ஸ்டு முதல்நிலை தேர்வு கட் ஆப் அதிகரிப்பு – வெளியான அப்டேட்!
இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற நடத்தப்படும் கட் ஆப் மதிப்பெண் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வு
நாடு முழுவதும் மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர ஆண்டுதோறும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது, இந்த தேர்வில் பங்குபெற ஜேஇஇ மெயின் எனப்படும் முதல்நிலை தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்நிலையில் வருகிற கல்வியாண்டில் ஜேஇஇ மெயின் தேர்வை எழுத 11,13,325 பேர் எழுதினார்கள். அதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுத 2,51,673 பேர் தகுதி பெற்றுள்ளனர்
தமிழக அரசு பள்ளிகளில் இனி டிஜிட்டல் முறையில் செயல்பாடு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
இந்நிலையில் தகுதி பெற்றவர்களில் 2,685 பேர் மாற்றுத் திறனாளிகள். 98,612 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 67,613 பேர் ஓபிசி, 37,563 பேர் எஸ்.சி., 18,752 பேர் எஸ்.டி., 25,057 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதன் படி இந்த ஆண்டு 90.7 பர்சன்டைல் கட் ஆப் இருக்கிறது.
Exams Daily Mobile App Download