அரசு வேலைவாய்ப்புகளில் ‘கிரீமிலேயர்’ இடஒதுக்கீடு – வருமான வரம்பை உயர்த்த திட்டம்!!
நாடு முழுவதும் உள்ள அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிறப்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையில் வருமான வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிரீமிலேயர் இடஒதுக்கீடு:
கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைகளில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இதர பிறப்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் – ரூ.40 லட்சமாக அதிகரிப்பு!!
அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் இதர பிறப்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவினருக்கு ‘கிரீமிலேயர்’ இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்கிற வரைமுறை உள்ளது. இதனை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் – வேளாண் பல்கலை அறிவிப்பு!!!
இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல்துறை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் அவர்கள் கூறுகையில், இதர பிறப்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை அதிகரிப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்