முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் – வேளாண் பல்கலை அறிவிப்பு!!!

0
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் - வேளாண் பல்கலை அறிவிப்பு!!!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் - வேளாண்முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் - வேளாண் பல்கலை அறிவிப்பு!!! பல்கலை அறிவிப்பு!!!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் – வேளாண் பல்கலை அறிவிப்பு!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வேளாண் படிப்புகளுக்கான வகுப்புகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் ஆண்டு வகுப்புகள்:

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேளாண் பல்கலைக்கழகம் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழக்தின் கீழ் 8 கல்லூரிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அடுத்த வாரம் கலந்தாய்வு!!

ஆனால் வேளாண் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழக அரசு அறிவிப்பின்படி பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கப்படும். மேலும் மாணவர் விடுதிகளும் பிப்ரவரி 8 முதல் வழக்கம்போல் செயல்படும், என அந்த பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!