தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் – ரூ.40 லட்சமாக அதிகரிப்பு!!
தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் புதிதாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அரசு சார்பில் வழங்கப்படும் முன்பணம் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்பணம் அதிகரிப்பு:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, வீடு கட்டுவதற்கான முன்பணத்தை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு – 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!
இது தொடர்பாக தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், தமிழக அரசு ஊழியர்கள் புதிதாக வீடு வாங்கவும் அல்லது நிலம் வங்கி வீடு கட்டவும் அரசு சார்பில் முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு ஊழியரகள் முன்பணம் பெற அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டியது அவசியம். இதற்காக ரூ.25 லட்சம் வரை முன்பணம் வழங்கப்பட்டு வந்தது.
தமிழக வனக்காப்பாளர் பணிகளுக்கான காலியிடங்கள் – 230 பேர் தகுதியின்றி நிராகரிப்பு!!!
தற்போது அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கான முன்பணம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்