உங்க மொபைலில் இந்த செயலிகள் இருந்த உடனே நீக்கிவிடுங்கள்.. மத்திய அரசு விதித்த அதிரடி உத்தரவு..
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானோர் தங்களது முக்கிய வேலைகளை கைபேசி மூலமே நிர்வகிக்கின்றனர். மேலும், தகவல் அறிந்துகொள்வது முதல் பண பரிவர்த்தனைகள் வரை ஏராளமான செயலிகளை பயன்படுத்தி தங்களது வேலைகளை எளிதாக நிறைவேற்றுகின்றனர். இந்நிலையில் நாம் அன்றாட வாழ்வில் உபயோகித்து வரும் இச்செயலிகள் குறித்து முக்கிய தகவல் ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 119 செயலிகளை தடை செய்வதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பெரும்பாலும் சீனா நாட்டை சார்ந்த உரையாடல் மற்றும் வீடியோ செயலிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இதுவரை 15 செயலிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள செயலிகள் இன்னும் அணுகக்கூடியதாக இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்”.
























